காஷ்மீரில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2021-09-21 20:00 GMT
கோப்புப்படம்
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் லாஸ்சிபுரா கிராமத்தில் ராணுவ வீரர்கள் சிலர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரோந்து இடைவேளையின்போது இரு வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அதில் ஆத்திரமடைந்த ஒரு வீரர், திடீரென தனது துப்பாக்கியால் அடுத்தவரை 2 முறை சுட்டார்.அதனால் படுகாயமடைந்த வீரரை அருகில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக ராணுவ வழக்கப்படி விசாரிப்பதாகவும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் உள்ளூர் போலீசாருக்கும் உரிய உதவி அளிக்கப்படும் என்று பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்