காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது அடுத்த கூட்டத்தை 24-ந் தேதி (நாளை மறுநாள்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அடுத்த கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காணொலி மூலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.