கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி

கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-09-23 10:03 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு நியூ தரகுபேட் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் பட்டாசு சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. அந்த குடோனில் பல்வேறு ரக பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பட்டாசு குடோனில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.

இந்த வெடிவிபத்தில் சிக்கி பட்டாசு குடோன் அருகே நின்றுகொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்