மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு

மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

Update: 2021-09-23 21:24 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மும்பையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 861 ஆக உயர்ந்தது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 5 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 68 ஆக உயர்ந்தது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 327 ஆக உயர்ந்தது.

தற்போது மும்பையில் 4 ஆயிரத்து 801 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 395 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். நடப்பாண்டில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி 11 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்