இமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு

இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-09-24 09:58 GMT
சிம்லா,

இமாசல பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சரவை கூடி இன்று ஆலோசனை மேற்கொண்டது.  இதில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளிலும், 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்