தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1,100 கோடி ரூபாய் கடன் உதவி

சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.

Update: 2021-10-02 08:37 GMT
புதுடெல்லி, 

சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது. 

சென்னை மாநகரத்தை உலகத் தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதனுடன் சேர்த்து மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக 296 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.

இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக, உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த கடன் தொகை,  கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்