ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது.

Update: 2021-10-03 10:26 GMT
ராஞ்சி, 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில்  இன்று பிற்பகல் 2.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்