இந்தியாவில் கடந்த 201 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு...!

இந்தியாவில் கடந்த 201 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது.

Update: 2021-10-05 04:16 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18 ஆயிரத்து 346 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 201 நாட்களில் பதிவான மிகக்குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆகும். 

இதனால், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 29 ஆயிரத்து 639 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்