ரூர்கி ஐ.ஐ.டி.யில் வெளிநாட்டு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரூர்கி ஐ.ஐ.டி.யில் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்டில் ரூர்கியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர் கடந்த செப்டம்பர் 28ந்தேதி இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் வெளிநாட்டில் இருந்து வந்த 4 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு மாணவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.