இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி 97 கோடி
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 97 கோடியை தொட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஒருபுறம், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை இரவு 7 மணியளவில் 97 கோடியை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 27 லட்சத்திற்கும் கூடுதலான டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.