மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு ஏற்படவில்லை

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் முதல்முறையாக கொரோனா இறப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-17 15:16 GMT
கோப்புப்படம்
நாட்டில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று. அம்மாநில தலைநகரான மும்பையானது கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தது. 

மும்பையில் கொரோனா தொற்று தொடங்கிய நாட்களில் இருந்து, தொடர்ந்து பாதிப்பின் மூலம் உயிரிழப்புகளை சந்தித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் முதல்முறையாக கொரோனா இறப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது மும்பையில் கொரோனா பாதிப்பானது தடுப்பூசியின் மூலம் கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 367 பேர் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த ஒன்றரை வருடங்களில் முதன் முறையாக கொரோனாவால் இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்