திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-10-24 20:26 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 28 ஆயிரத்து 154 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 13 ஆயிரத்து 77 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று உண்டியல் வருமானமாக ரூ.2 கோடிேய 15 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்