சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்
சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
சுக்மா,
சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம். இங்கு தலைக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர் உள்பட 9 நக்சலைட்டு பயங்கரவாதிகள் இன்று போலீசில் சரணடைந்தனர்.
அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் ரொக்கத்தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பஸ்தார் போலீஸ் சூப்பிரண்டு சுனில் சர்மா தெரிவித்தார்.