கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

Update: 2021-11-14 11:18 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில்  எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர் ஆகிய 3-மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கேரளாவின் மத்திய பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. 

தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்