பிரபல இந்தி எழுத்தாளர் மன்னு பண்டாரி காலமானார்
அரியானாவில் பிரபல இந்தி எழுத்தாளர் மன்னு பண்டாரி காலமானார்.
குருகிராம்,
பிரபல இந்தி எழுத்தாளர் மன்னு பண்டாரி கடந்த சில காலங்களாக உடல்நல குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரியானாவின் குருகிராமில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் டெல்லியில் நாளை நடைபெறும் என்று அவரது மகள் உறுதிப்படுத்தி உள்ளார்.