ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஹைடெர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

Update: 2021-11-15 14:03 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் ஹைடெர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.  சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்