கர்நாடகா: மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழப்பு

கர்நாடகாவில் மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழந்தது.

Update: 2021-11-18 04:29 GMT
கோப்புப்படம்
பெங்களூரு,

கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சித்ரதுர்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இதனால் ஓடைகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தரைமட்ட பாலங்களை மூழ்கடித்தப்படி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. இதில் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒசதுர்கா தாலுகா தெக்கலவாடி கிராமத்தில் 14 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. அதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் விவிதாடஹள்ளி கிராமத்திலும் வெள்ளத்தில் சிக்கி12 ஆடுகள் பலியானது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 4 ஆடுகளை விவசாயிகள் காப்பாற்றினர். வெள்ளத்தில் சிக்கி பலியான ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்