வேளாண் சட்டம் வாபஸ்: அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் - ராகுல் காந்தி

சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-19 05:05 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்தை  தெரிவித்துக்கொள்கிறேன் " என இந்தியில்  பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்