உ.பி.: ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம்

உத்தர பிரதேசத்தில் ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.

Update: 2021-11-23 14:57 GMT

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ஜீவார் நகரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.  இதுபற்றி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகிற 2024ம் ஆண்டில் இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும்.

5வது சர்வதேச விமான நிலையம் ஆக இது இருக்கும்.  ரூ.34 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்