இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சிறை பிடிப்பு
இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன.
காந்திநகர்,
குஜராத் பாதுகாப்பு துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ரோந்து சென்றபோது, இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகளை சிறை பிடித்து உள்ளனர்.
அந்த படகில் 18 பேர் இருந்தனர். இதன்பின் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் இரண்டும் ஓக்கா பகுதிக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.