காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி கைது

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதியை போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து கைது செய்துள்ளது.

Update: 2021-12-04 16:29 GMT


ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் மத்தியில் அமைந்த புத்காம் மாவட்டத்தில் போலீசார், சி.ஆர்.பி.எப் படையினர் மற்றும் ராணுவம் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில், லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதியை கைது செய்தனர்.

காஷ்மீரின் புத்காமில் பீர்வா பகுதியை சேர்ந்த அபு ஹமீது நாத் என பயங்கரவாதியை அடையாளம் கண்டுள்ளனர்.  இதன்பின் ஹமீதிடம் இருந்து கைத்துப்பாக்கி, சீன எறிகுண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்