வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழு அக்கட்சி தலைவர் தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

Update: 2021-12-11 19:23 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க. பொது செயலாளர் திலீப் சாய்கியா வெளியிட்டுள்ள செய்தியில், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழுவானது கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் தங்களுடைய பகுதியில் உள்ள முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர்.  இதன்பின்னர் பிரதமருடன் இணைந்து ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்