ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைத்தது, காங்கிரஸ்தான் - ராகுல்காந்தி பெருமிதம்
ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைத்தது, காங்கிரஸ்தான் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் காங்கிரஸ் கட்சி. ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைத்தது காங்கிரஸ்தான். இந்த பாரம்பரியம் குறித்து பெருமைப்படுவோம். காங்கிரஸ் நிறுவன தின வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.