மராட்டியத்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 33,470 பேருக்கு தொற்று..!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-10 16:49 GMT
கோப்புப்படம்
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது.  

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 33 ஆயிரத்து 470 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 69,53,514 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் கொரோனா பாதிப்ப்பு காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,41,647 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 29 ஆயிரத்து 671 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66,02,103 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 06 ஆயிரத்து 046 பேர் தற்பொது சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையே மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,247 ஆக (இன்று மட்டும் 31 பேருக்கு பாதிப்பு) உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்