தடுப்பூசியால் அதிக உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத் துறை

கொரோனா மூன்றாவது அலையில் தடுப்பூசியால் அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-20 17:30 GMT
கோப்பு படம்
புதுடில்லி, 

நாட்டில் தற்போது கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகி வருகிறது. கொரோனாவால் நாளுக்குநாள் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், தற்போது கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. எனினும் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதற்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பதுதான் காரணம். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்