கூகுள் சிஇஓ மீது மும்பையில் வழக்குப்பதிவு

கூகுள் நிறுவனம் மீதும் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மீதும் மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-26 18:02 GMT
மும்பை,

கூகுள் நிறுவனம் மீதும் அதன் சிஇஓ சுந்தர்பிச்சை மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீதும் மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பட டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரான சுனீல் தர்ஷன் மும்பை அந்தேரி அப்அர்பன் பகுதியில் உள்ள எம்ஐடிசி போலீஸ் நிலையத்தில் கூகுள் நிறுவனம், சுந்தர்பிச்சை மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

யூடியூப் வீடியோ காப்புரிமை விதி மீறல்கள் தொடர்பாக சுனீல் தர்ஷன் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து கூகுள் நிறுவனம், சுந்தர்பிச்சை மேலும் 5 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்