முழுமையான மதுவிலக்கை எந்த அரசாலும் அமல்படுத்தமுடியாது: முதல்-மந்திரி பேச்சு

முழுமையான மதுவிலக்கை எந்த அரசாலும் அமல்படுத்த முடியாது என முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-26 20:31 GMT
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று குடியரசுதின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். 

குடியரசுதின சிறப்புரையில் பேசிய சவுகான், மது விற்பனைக்கு தடை விதிப்பதன் மூலம் எண்ட்ஜ அரசாலும் முழுமையாக அமல்படுத்தமுடியாது. மதுவை தடை செய்வதால் மட்டும் மக்கள் மதுக்குடிப்பது நின்றுவிடாது. மதுக்குடிப்போர் மீதான பார்வை சமூகத்தில் மாறும்போது மட்டுமே முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகும்’ என்றார்.   

மேலும் செய்திகள்