கர்நாடகத்தில் பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-30 22:00 GMT
பெங்களூரு,

கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இன்று(திங்கட்கிழமை) முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ஹட்டி பட்டணத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த 2 பள்ளிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தலா 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்