காஷ்மீர் குண்டு வீச்சு சம்பவம்; 2 பேர் கைது

காஷ்மீரில் பொதுமக்கள் மீது கையெறி குண்டு வீசியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-03-08 13:53 GMT


ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமீரா கடல் பாலம் அருகே பொதுமக்கள் அதிகளவில் இருந்த நிலையில், கையெறி குண்டு வீச்சு நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில் குடிமக்கள் 36 பேர் உள்பட 38 பேர் காயமடைந்தனர்.  இதில், பொதுமக்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில், ஸ்ரீநகர் எஸ்.பி. லட்சயா சர்மா இன்று கூறும்போது, இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.  இதில், 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.



மேலும் செய்திகள்