ஜம்மு-காஷ்மீர் முன்னாள் மந்திரி ஹவாலா வழக்கில் கைது

ஹவாலா பண வழக்கில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் மந்திரி பாபு சிங் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-09 13:59 GMT
image credit:ndtv.com
ஜம்மு காஷ்மீர்,

ஹவாலா பரிவர்த்தனைகள் செய்ததாக நான்கு பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமான பணம் பாபு சிங்கிடம் ஒப்படைக்கப்பட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாபு சிங்கை போலீசார் கைதுசெய்தனர். அவர் விசாரணைக்காக ஜம்முவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

கைது செய்யப்பட்ட பாபு சிங், கடந்த 2002-ம் ஆண்டு பிடிபி-காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்