ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2022-05-13 13:00 GMT
கோப்புப்படம்
ஜம்மு காஷ்மீர்,

வடக்கு காஷ்மீரின் பந்திபோராவின் அராகம் பகுதியில் உள்ள பிரார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்புப்படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதி ஒருவர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். மேலும் இருவர் பிடிபட்டனர். 

அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்