ஆங்கிலேய கால்வாயில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி

ஆங்கிலேய கால்வாயில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-08-12 22:42 GMT

கோப்புப்படம்

பாரீஸ்,

ஆங்கில கால்வாயில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள்படி, மூழ்கிய படகில் 65 அல்லது 66 பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் சாட்சியங்கள் தெரிவித்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் ஆங்கிலேய அதிகாரிகளால் டோவருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்