டியூஷன் செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

புதுச்சேரியில் டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-01-08 18:03 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த தசரதன் என்பவரின் மகன் பாலமுருகன். புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளான்.

தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 2 நாட்களாக சிறுவன் டியூஷனுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்