சென்னை-கொல்கத்தா தேசிய நெஞ்சாலையில் நின்ற லாரியுடன் கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

சாலையில் நின்ற லாரியுடன் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-16 13:38 GMT

நெல்லூர்,

ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் கவுராவரம் கிராமம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெஞ்சாலையில், கார் ஒன்று சாலையில் நின்ற லாரியின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சமதுலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் விஜயவாடா பகுதியில் நடைபெறும் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடரமணா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்