டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது

டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்டார்.;

Update:2022-06-15 12:18 IST

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை ஆஜராக அமலக்கத்துறை அழைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 3-வது நாளாக நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

3-வது நாளாக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் எம்பி.க்கள் , நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்தது காவல்துறை எதிர்ப்பு போராட்டம் நடத்த முயன்ற தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி காவல்துறை போராட்டத்தை தடுத்தனர். டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்