தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு

கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது

Update: 2023-03-16 12:46 GMT

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது."தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது, இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61-ஐ விட அதிகமாக உள்ளது"

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுயுறுத்தியுள்ளது.

மேலும் கேரளா ,கர்நாடகா , மராட்டியம் , தெலுங்கானா குஜராத் மாநில செயலாளர்களுக்கும் மத்திய அரசு வலியுயுறுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்