அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்வு

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது

Update: 2022-07-02 12:43 GMT

கவுகாத்தி,

அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அசாமின் பிரம்மபுத்திரா, கொப்பிலி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் ஆபத்து அளவை கடந்து ஓடுகிறது.வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.மேலும் அசாமில் 30 மாவட்டங்களில் 29.7 லட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்