குடிபோதையில் தகராறு: கணவனை அடித்துக்கொன்ற மனைவி

இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-21 00:00 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்துக்கு உட்பட்ட பால்மிகி காலனியை சேர்ந்தவர் பண்டி பால்மிகி (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் நேற்று முன்தினமும் வழக்கம்போல குடித்து விட்டு வந்தார். அத்துடன் மனைவி கவிதா தேவியிடம் (35) தகராறு செய்து அவரை தாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த கவிதா தேவி, அருகில் கிடந்த கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்து கணவரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பண்டி பால்மிகி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பால்மிகியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கவிதா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்