' லா நினா காலம்' இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2024-04-16 03:22 GMT

புதுடெல்லி,

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது மிதமான எல் நினோ நிகழ்ந்து வருகிறது. இது பருவமழை காலம் தொடங்குவதற்குள் சமநிலைக்கு வரும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு லா நினா நிலை ஏற்பட்டு அதுவும் ஆகஸ்டு-செப்டம்பருக்குள் இறுதிக்கு வரும். இந்தியாவில் கடந்த 1951-2023-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எல் நினோவுக்கு பிந்தைய 9 லா நினா காலகட்டங்களில் இயல்பை விட அதிக அளவில் மழை பெய்திருக்கிறது.

அந்தவகையில் இந்தியாவில் வருகிற பருவமழை காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) வழக்கத்தை விட அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாக (நீண்டகால சராசரி 86 செ.மீ.) இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்