இலவச பஸ் பயணம் கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 3.12 கோடி பெண்கள் பயணம்

கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், போக்குவரத்து பேருந்துகளில் பெண் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது

Update: 2023-06-19 11:00 GMT

பெங்களூரு

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. முதல் வாக்குறுதியாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் செல்லும் 'சக்தி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களை தவிர அனைத்து பகுதிகளிலும் பெண் இலவசமாக பயணிக்கலாம். பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. உள்பட 4 போக்குவரத்து மண்டல பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சக்தி திட்டம் அமலுக்கு வந்த பிறகு நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா தலங்கள், கோவில்களுக்கு படையெடுத்து செல்ல பெண்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று பெங்களூருவில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலை மோதியது. மைசூரு, தர்மஸ்தலா, மலை மாதேஸ்வரா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் பலர் கே.எஸ்.ஆர்.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்ததால் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

சாம்ராநகர் மாவட்டம் கொள்ளேகாலில் இருந்து மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பஸ்சின் பின்பக்க கதவு உடைந்து போனது.

மகாதேஷ்வர் மலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தின் உள்ளே பெரும் நெரிசல் ஏற்பட்டதுடன், பேருந்தின் ஜன்னல் கம்பியை சிலர் உடைத்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக்.

நீண்ட நாட்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கிடைக்காது. எங்க டூர் போகணும்னா சீக்கிரம் போங்க. இந்த திட்டத்தை முன்கூட்டியே பயன்படுத்தவும். பிறகு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. கருவூலம் தீர்ந்து போகிறது, இன்னும் ஓராண்டில் அரசு திவாலாகிவிடும். பின்னர் அனைத்து திட்டங்களும் திரும்பப் பெறப்படும். உங்க ஆசையெல்லாம் சீக்கிரம் அனுபவிங்க என் குறிப்பிட்டு டுவிட் செய்து உள்ளார்.

இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மக்கள் அவசரப்படாமல் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது

கர்நா.ஜூன் 11 ஆம் தேதி, முதல் மந்திரி சித்தராமையா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்

ஒரு வாரத்தில் மொத்தம் 3 கோடியே 12 லட்சத்து 9 ஆயிரத்து 696 பேர் பயணம் செய்துள்ளனர். பெண் பயணிகளின் பயண மதிப்பு ரூ.69 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 971 ரூபாய். நான்கு மாநகராட்சிகளிலும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்