பத்ராவதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

பத்ராவதியில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-07-14 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஜன்னாபுரா பகுதியை சேர்ந்தவர் மது (வயது27). இவரது மனைவி மோனிகா (21). இந்தநிலையில் மதுவின் வீடு கடந்த சில நாட்களாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்றுமுன்தினம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மது மற்றும் அவரது மனைவி ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து பத்ராவதி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதும் காரணமா என பத்ராவதி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்