கேரளா: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 57 பேர் காயம்

கொல்லம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-05-31 00:52 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம்,கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் அரசு பேருந்து மீது சுற்றுலா பேருந்துமோதி விபத்துக்கு உள்ளானது ,இதில் 57 பேர் காயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த பிறகு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது,

இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்