பொறியியல் மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை

போபாலில் பொறியியல் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-07-30 10:46 GMT

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளாகத்தில் உள்ள மரத்தில் 22 வயது பொறியியல் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படிக்கும் உத்தேஷ்யா அஹிர்வார் என்ற அந்த மாணவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மாணவரின் மரணத்திற்கான காரணம் குறித்து அறிய தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகம், கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்