மகன்-மகளை கொன்று கிணற்றில் குதித்து வியாபாரி தற்கொலை

கலபுரகியில் மகன்-மகளை கொன்று கிணற்றில் குதித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-06 21:38 GMT

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் ஆலந்தா புறநகர் பகுதியை சேர்ந்தவர் சித்து என்ற மகாமல்லப்பா. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் மகன் மணீஷ் (வயது 10), மகள் ஸ்ரேயா (8). சித்து மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். போதிய வருமானம் இல்லாததால் உறவினர்களிடமும், பிற நபர்களிடமும் அவர் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கொடுக்கும்படி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4-ந் தேதி தனது குழந்தைகள் மணீஷ், ஸ்ரேயாவுடன் சித்து வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் குழந்தைகளுடன் வீட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில், நேற்று காலையில் ஆலந்தா அருகே உள்ள கிணற்றில் குழந்தைகள் மணீஷ், ஸ்ரேயா உடல்கள் மிதந்தது. தகவல் அறிந்ததும் ஆலந்தா போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் சோதனை நடத்தினார்கள். அப்போது சித்துவின் உடலும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. கடன் தொல்லை காரணமாக தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, சித்துவும் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்