சரக்கு வாகனம் மோதி முதியவர் சாவு

சாலையை கடக்க முயன்றபோது சரக்கு வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-04 18:45 GMT

மைசூரு-

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மதுகிரி கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் புட்டசுவாமி கவுடா (வயது80). இவர் உன்சூர் டவுன் பகுதிக்கு சொந்த வேலை காரணமாக சென்றார். பின்னர் வேலை முடிந்து பஸ் நிலையத்திற்கு பஸ் ஏறுவதற்காக சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புட்டசுவாமி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். உன்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சரக்கு வாகன டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்