கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை மீறி கேதர்நாத் ஆலயத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருகை!

கேதர்நாத் பகுதி முழுவதும் மேகமூட்டம் சூழ்ந்து பனிப்போர்வையில் மூழ்கியுள்ளது.

Update: 2022-06-27 12:31 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கேதர்நாத் ஆலயத்துக்கு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கேதர்நாத் பகுதி முழுவதும் மேகமூட்டம் சூழ்ந்து பனிப்போர்வையில் மூழ்கியுள்ளது.அங்கு வானிலை ஆய்வு மையத்தின் தரப்பிலிருந்து மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்று இரவு பெய்த கனமழைக்கு பிறகு இன்றும் ஏராளமான பக்தர்கள் கேதார்நாத் சென்றடைந்தனர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் கேதர்நாத் வந்துள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்