ஏரியில் பெண் பிணம் மீட்பு; யார் அவர்? போலீஸ் விசாரணை

உப்பள்ளி அருகே ஏரியில் இருந்து பெண் பிணம் மீட்கப்பட்டது. மேலும் யார் அவர்? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-29 15:13 GMT

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகாவில் உன்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பெண் பிணம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை அப்பகுதியில் சுற்றுலா வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவா்கள் இதுகுறித்து வித்யா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வித்யா நகர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்