கட்டிட சிலாப் இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் காயம்

மும்ரா அம்ருத்நகர் பகுதியில் கட்டிட சிலாப் இடிந்து விழுந்ததில் விபத்தில் 2 சிறுவர்கள் காயமடைந்தனர்.

Update: 2023-07-13 19:45 GMT

தானே, 

மும்ரா அம்ருத்நகர் பகுதியில் 5 மாடி கொண்ட கட்டிடத்தின் 2-வது மாடியில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென சிலாப் இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் 2 சிறுவர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் தானே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். காயமடைந்த 7 மற்றும் 9 வயதுடைய 2 சிறுவர்களை மீட்டு கல்வா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிலாப் இடிந்து விழுந்த கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்