வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 2 பேர் கைது

Update: 2023-02-08 19:00 GMT

மும்பை, 

நவிமும்பை கோபர்கைர்னே, கன்சோலி மற்றும் போன்காடே காவ் பகுதியில் வீடு புகுந்து திருட்டு சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 90 கேமரா காட்சிகளை வைத்து நடத்திய ஆய்வில் டிரைவராக வேலை பார்த்து வந்த அங்குஷ் தாகே (வயது36) என்பவர் தான் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அவரது கூட்டாளி பப்லு பங்காலி (30) என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 57 ஆயிரம் திருட்டு பொருட்களை மீட்டனர்.

2 பேர் பிடிபட்டதன் மூலம் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருந்த 8 வழக்குகள் முடிவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்