ஆபாச படத்தை பரப்பிய வழக்கில் நடிகை ராக்கி சாவந்தை கைது செய்ய 1-ந் தேதி வரை ஐகோர்ட்டு தடை

ஆபாச படத்தை பரப்பிய வழக்கில் நடிகை ராக்கி சாவந்தை கைது செய்ய 1-ந் தேதி வரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

Update: 2023-01-24 18:45 GMT

மும்பை, 

இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் மீது மற்றொரு நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், தனது ஆபாச படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூகவலைதளங்களில் பரப்பியதாக கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் பாலியல் துன்புறுத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு ராக்கி சாவந்த் தரப்பில் செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி கார்னிக் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராக்கி சாவந்தை நேற்று வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 1-ந் தேதி வரை நீதிபதி தள்ளி வைத்தார். மேலும் அதுநாள் வரை நடிகை ராக்கி சாவந்தை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்